Nagaratharonline.com
 
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழா  Jun 21, 15
 
தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்க குடும்ப விழாவுக்கு, சங்கத் தலைவர் குமரப்பன் தலைமை வகித்தார். செயலர் குருசாமி வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் மற்றும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்ற பெத்தாளாச்சி பெண்கள் மேல்நிலப்பள்ளி மாணவி வைஷ்ணவிக்கு நினைவுப்பரிசு மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர். குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நகரத்தார் பள்ளிகளின் செயலாளர் ராமநாதன் பரிசுகள் வழங்கினார்.