Nagaratharonline.com
 
பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை  Jun 17, 15
 
பூலாங்குறிச்சி சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

பூலாங்குறிச்சி வ.செ.சிவ. அரசு கலைக்கல்லூரி முதல்வர் பா.ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பூலாங்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் பிஏ. வரலாறு பாடப்பிரிவில் 34 இடங்களும், பி.காம் பாடப் பிரிவில் 56 இடங்களும், பி.எஸ்.சி. வேதியியல் பாட வகுப்பில் 27 இடங்களும், பி.எஸ்.சி. கணினி அறிவியல் பாட வகுப்பில் 26 இடங்களும் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்பும் வகையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.