Nagaratharonline.com
 
அமராவதி புதூர் : சிதைந்து வரும் சங்கரபதி கோட்டை  Mar 1, 10
 
காரைக்குடி அருகே வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை பராமரிப்பு இன்றி அழிந்து வருகிறது. அமராவதி புதூர் அருகே இக்கோட்டை உள்ளது. சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்கள், இங்கு படை தலம் அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர்.




மறைக்கப்படும் வரலாறு: வரலாற்று சிறப்பு மிக்க இக்கோட்டை சிதிலடைந்துள்ளது. கோட்டைக்குள் அடர்ந்து வளர்ந்த மரங்கள், கரையான் புற்றுக்கள் உள்ளன. மதுரை திருமலை நாயக்கர் மகாலுக்கு நிகரான கட்டட கலை கொண்ட, இக்கோட்டையை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இதை சீரமைத்து சுற்றுலா தலமாக அறிவிக்கலாம். காரைக்குடி, சுற்றுப்பகுதிக்கு வரும் பயணிகள் இதை பார்த்து செல்ல சுற்றுலா, தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


source : Dinamalar