Nagaratharonline.com
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா  May 3, 15
 
பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. அன்றைய தினத்தன்று நாட்டுக்கல், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளின் பக்தர்கள் பால் குடம் எடுத்து பட்டமரத்தான் சுவாமிக்கு அணிவித்து வழிபட்டனர். தொடர்ந்து,சனிக்கிழமை பூக்குடி வீதி, பாண்டிமான் கோயில் தெரு ஆகியவை சார்பில் பால் குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து சுவாமிக்கு சாத்தி வழிபட்டனர்.

தொடர்ந்து, "திரைப்படங்கள் சமூகத்தை சீர்படுத்துகிறதா?, சீரழிக்கிறதா?' என்ற தலைப்பில் திரைப்பட நடிகர் ராதாரவி நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை மதுமிதா, தா.கு.சுப்பிரமணியம், ஆவண பட இயக்குனர் பு.சரோன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கேற்று வாதிட்டனர்.