Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரத்தார் : ரத்தினவேல் வழிபாடு  Mar 1, 10
 
தேவகோட்டை நகரத்தார் சார்பில், மாசி மகத்தை முன்னிட்டு ரத்தினவேல் ஊர்வலம் நடந்தது.குன்றக்குடியில் ரத்தினவேல் ஏந்தி, த்தாரால் கொண்டுவரப்பட்டு நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பிறகு நகர பள்ளிக்கூடத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம்செய்தனர். நகர பள்ளி கூடத்தில் முருகன் சிலையில் வைரவேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைககள் செய்யப் பட் டன. ஆயிரக்கணக் கான பக்தர்கள் வழிபட்டனர். இந்த வைரவேலை வீபூதி பையிலிருந்து வெளியே எடுத்தால் 16 மூடை அரிசியால் தயாரிக்கப்ப்டட சாப்பாடு போடவேண்டும் என்ற ஐதீகத்தின் படி நேற்று 16 மூடை அரிசியில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் நடந்தது

source ; Dinamalar