Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோயிலில் தேரோட்டம்  May 2, 15
 
திருக்கோஷ்டியூர் செளமியநாராயண பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த கோயிலில் ஏப். 24ஆம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.29ஆம் தேதி 6 ஆம் திருநாளில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 30ஆம் தேதி 7 ஆம் திருநாளில் மாலை, சூர்ணாபிஷேகமும், தங்கத் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. மே 1ஆம் தேதி 8 ஆம் திருநாளாக குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சனிக்கிழமை 9 ஆம் திருநாளில் தலையலங்காரம் கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (மே 3) மாலை 3.55 மணிக்கு மேல் 4.25க்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை 12 ஆம் திருநாளில் புஷ்பப் பல்லக்கு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.