Nagaratharonline.com
 
எம்.ஏ.சிதம்பரம் அறக்கொடை விருதுகள் அறிவிப்பு  Sep 25, 09
 
சென்னை, செப். 24: 2009-ம் ஆண்டுக்கான எம்.ஏ. சிதம்பரம் அறக்கொடை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் இலக்கியம் மற்றும் மொழி பங்களிப்பில் சிறந்து விளங்கும் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, சென்னை தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆலோசகர் டாக்டர் டி.பி. சித்தலிங்கய்யாவுக்கு வழங்கப்பட உள்ளது.

சித்திரம், சிற்பம், இசை, நாடகம், நாட்டியம், படைப்பிலக்கியம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருதுக்கு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஆர். நாகசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த முறையில் செயல்படும், முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான ஏ.சி. முத்தையா விருது, தொழிலதிபர்கள் சரபேஸ்வர், எஸ். சிவராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு விருதும் தலா ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பேழை மற்றும் ஒரு பட்டயத்தைக் கொண்டது. விருது வழங்கும் விழா "ஸ்பிக்' நிறுவனர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியாரின் 91-வது பிறந்த நாளான 12.10.2009 அன்று, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.


Source : Dinamani 25/09/09