Nagaratharonline.com
 
அரளிக்கோட்டை- வேலங்குடி கருப்பர் கோவில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை  Feb 22, 15
 
திருப்பத்தூர் அருகே உள்ளது அரளிக்கோட்டை. இங்கு 150 குடும்பங்களுக்கு சொந்தமான வேலங்குடி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருப்பர் சாமிக்கு அணிவிக்கும் தங்க ககுக்கனண், பூனூல், காப்பு, தண்டை என 5 பவுன் நகைகள் உள்ளன. இவையனைத்தும் கோவிலிலேயே வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று இரவு கோவிலின் மரக்கதவை உடைத்த யாரோ உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த 5 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த கோவில் நிர்வாகத்தினர், போலீசில் புகார் செய்தனர். திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து கோவிலில் புகுந்து கொள்ளையடித்த ‘மர்ம’ மனிதர்களை தேடி வருகிறார்.