Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, திருக்களம்பூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு  Feb 18, 15
 
பொன்னமராவதி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல், ஏனாதி,மேலைச்சிவபுரி, வேந்தன்பட்டி, திருக்களம்பூர் ஆகிய ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம், பண்ணைக்குட்டை, கிராம சே வை மையக் கட்டடம், பசுமை வீடுகள், தனிநபர் கழிப்பறைகள், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் கலையரங்கம் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.