Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்  Feb 16, 15
 
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழியல் ஆய்வுப்போக்குகள் தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு சன்மார்க்க சபை தலைவர் ப.சா.சிங்காரம் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் க. கனகராசு முன்னிலை வகித்தார்.
. கருத்தரங்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பீ.மு. மன்சூர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆய்வுக் கோவையை வெளியிட்டுப் பேசினார். கல்லூரிக் குழுத் தலைவர் அ. சாமிநாதன், செயலர் சி. சாமிநாதன், சன்மார்க்கசபை செயலர் ராம. இலக்குமணன், பேராசிரியர்கள் நா. விஜயரெகுநாதன், சிவ. சொர்ணம், ம. செல்வராசு, ராம. மோகன், வே.அ. பழனியப்பன், பொன். கதிரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.