Nagaratharonline.com
 
கோவிலூர் ரசாயன ஆலை செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்  Feb 16, 15
 
கோவிலூர் தனியார் ரசாயன ஆலை தொடர்ந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவிலூர்- குன்றக்குடி சாலையில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் கடந்த பிப். 12ஆம் தேதி ரசாயன குழாய் வெடித்ததில் வாயு வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து ஆலையை மூட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் ஆலை தொடர்ந்து செயல்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை ஆலையில் பராமரிப்புப் பணிகள் மட்டும் நடைபெறும். ஆலை செயல்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.