Nagaratharonline.com
 
என்.வைரவன்பட்டியில் அய்யனார் கோயிலுக்கு சாமி உலா வாகனங்கள் உபயம்  Feb 16, 15
 
என்.வைரவன்பட்டியில் மக்கமடை அய்யனார் கோயிலுக்கு மஹா சிவராத்திரி திருவிழாவில் சாமி திருவீதி உலா வாகனங்கள் சனிக்கிழமை உபயமாக வழங்கப்பட்டன.

என்.வைரவன்பட்டியில் உள்ள மக்கமடை அய்யனார் கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு தொழிலதிபர் சி.டி.எஸ்.சிதம்பரம் குடும்பத்தினர் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள யானை மற்றும் மூஷிக வாகனங்களை வழங்கினர்.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கீழச்சிவல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் அழகுமணிகண்டன், வைரவன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் குருமூர்த்தி, சக்திவைரவன் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். இவ்வாகனங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அய்யனாருக்கு யானை வாகனமும், விநாயகருக்கு மூஷிக வாகனமும் வழங்கபட்டது.