Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பையில் தொழில்முனைப்பு பயிலரங்கம்  Feb 16, 15
 
நெற்குப்பை சோமலெ. நினைவு கிளை நூலகத்தில், உலகம் சுற்றிய தமிழர் சோமலெ- இன் பிறந்தநாள் விழா, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவு பயிலரங்க விழாவாக நடத்தப்பட்டது.

கிளை நூலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, டாக்டர் சுப்பையா தலைமை வகித்து, சோமலெ உலகம் சுற்றி தமிழ் வளர்த்த பண்பினை எடுத்துரைத்தார். பின்னர் நடைபெற்ற தொழில்முனைப்பு பயிலரங்கத்தில், பேராசிரியர் முகமது இப்ராகிம் மூசா தொழில் செய்ய விரும்பு என்ற தலைப்பில் பயிலரங்க உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி ஆச்சி மற்றும் தொழில்முனைவு பயிற்றுநர்கள் மாணவ, மாணவியரிடையே வேலைக்கு காத்திராமல் வேலையை ஏற்படுத்திக் கொள்ளுதல், பிறருக்கு வேலை வழங்குதல் போன்ற பயிற்சியினை அளித்தனர். இதில், திருப்பத்தூர் ஆ.பி. சீதையம்மாள் கல்லூரி மேலச்சிவபுரி, கணேசன் கலை அறிவியல் கல்லூரி, மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.