Nagaratharonline.com
 
பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது  Feb 20, 10
 
பொன்னமராவதி அருகே 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து தூத்தூர் மலையில் விட்டனர்.பொன்னமராவதி அருகே உள்ள சுந்தரசோழபுரம் கீழப்பட்டியில் வீட்டுதோட்டம் அருகே 2 மலைப்பாம்பு கோழிகளை விரட்டிக் கொண்டிருந்தது.




இதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி சாதுர்யமாக இரண்டு மலைப்பாம்புகளையும் பிடித்து வனத்துறை தோட்டக்காவலர்கள் அப்துல்மஜீத், ஆண்டி, நல்லான் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் 2 மலைப்பாம்புகளையும் தூத்தூர் மலையில் விட்டனர். இது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source : Dinamalar