Nagaratharonline.com
 
வெறிச்சோடிய சிராவயல் மஞ்சுவிரட்டுப் பொட்டல்  Jan 17, 15
 
சிராவயலில் மஞ்சுவிரட்டு நடைபெறாததால் மஞ்சுவிரட்டுப் பொட்டல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் பல ஆண்டுகளாக நடந்து வந்த சிராவயல் மஞ்சுவிரட்டு இந்த ஆண்டு நடைபெறவில்லை. இதனால் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர் வேதனை அடைந்துள்ளனர்.

கோயில் மாட்டுக்கு அலங்காரம் செய்து, பெரியநாச்சியம்மன் கோயில், தேனாட்சியம்மன் கோயில், மாலையிட்ட அய்யாசாமி, மேலப்பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் சாமி கும்பிட்டனர்

எனக்கு நினைவு தெரிந்து லால்பகதூர் சாஸ்திரியின் மறைந்த நாளன்று மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை. அதன் பின் இப்போது தான் மஞ்சுவிரட்டு நடக்கவில்லை என்று கூறினார்.