Nagaratharonline.com
 
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு  Feb 19, 10
 
தென் மாவட்டங்களில் புகழ் பெற்ற சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பிப்., 28ல் நடக்கிறது. மலைமீதுள்ள தண்டாயுதபாணி கோயில் 10 நாள் மாசித்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. கடைசி நாள் மாசி மகத்தன்று பிற்பகல் மஞ்சுவிரட்டு நடக்கிறது. பன்னெடுங்காலமாக நடந்த மஞ்சுவிரட்டு கடந்த ஆண்டு கோர்ட் தடையால்மகத்தன்று நடக்காமல் ஒரு மாதத்திற்கு பின் நடந்தது. இந்த ஆண்டு கோர்ட் நிபந்தனைப்படி அரசிற்கு முன்வைப்பு தொகை ரூபாய் 2 லட்சம் செலுத்துவது, தொழுவம் முன் பேரிகாட் அமைப்பது, மாடு பிடிவீரர்களுக்கு சீருடை வழங்குவது, மருத்துவ முகாம் அமைத்தல் ஏற்பாடுகள் செய்து மாசிமகத்தன்று மஞ்சுவிரட்டு நடத்துவது என ஐந்து நிலைநாட்டார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

source : Dinamalar