Nagaratharonline.com
 
புதுவயலில் பல்லாங்குழி ரோடு : மக்கள் அவதி  Jan 3, 15
 
புதுவயல் சந்தைக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால், வாகனங்களின் உதிரி பாகங்கள் சேதமடைந்து வருகின்றன.

அறந்தாங்கி, புதுக்கோட்டையில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டிற்கு சந்தைப்பேட்டை ரோடு வழியே செல்ல வேண்டும். ரோட்டின் அகலம் குறைவு, சரக்கு வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற வகையில் இல்லாததால், புதிதாக போட்ட ரோடு மூன்று மாதங்களுக்குள் பெயர்ந்து விடுகிறது. நாளடைவில் இந்த பள்ளங்கள் பெரியதாகி, டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த ரோட்டை புதுப்பிக்கின்றனர். இதனால், ரோட்டின் மட்டம் உயர்ந்து வீட்டின் மட்டம் குறைந்துவிட்டது. மழை காலங்களில் ரோட்டில் ஓடும் கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. தரமாக ரோட்டை புதுப்பிக்கவேண்டும்.