Nagaratharonline.com
 
செம்பூதி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் சாவு  Jan 1, 15
 
பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் மணிமாறன் மகன் திருப்பதிராஜா (22). இவர் புதுச்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில், புத்தாண்டுக்காக கோவனூர் வந்த திருப்பதிராஜா, வேகுப்பட்டியில் உள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு கோவனூர் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, செம்பூதி அருகேஅடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த நிலையில் சாலையில் கிடந்துள்ளார். அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், பொன்னமராவதி பாப்பாயி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.