Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு வழிபாட்டுக்கு சிறப்பு ஏற்பாடு  Dec 29, 14
 
பிள்ளையார்பட்டியில் புத்தாண்டுக்கு சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். அன்று முழுவதும் மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் நிழற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். சிறப்பு வழிபாட்டு ஏற்பாடுகளை, ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தொண்டர் ஏ.ஆர். நாராயணன் செட்டியார், காரைக்குடி முத்துக்கருப்பன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.