Nagaratharonline.com
 
திருக்​கோஷ்​டி​யூர் செüமிய நாரா​ய​ணப் பெரு​மாள் கோயில் மாசித் தெப்​பத் திரு​விழா  Feb 19, 10
 
சிவ​கங்கை மாவட்​டம்,​​ திருப்​பத்​தூர் அருகே உள்ள திருக்​கோஷ்​டி​யூர் செüமிய நாரா​ய​ணப் பெரு​மாள் கோயில் மாசித் தெப்​பத் திரு​விழா வரும் 19-ம் தேதி ​(வெள்​ளிக்​கி​ழமை)​ காலை 9 மணிக்​குக் கொடி​யேற்​றத்​து​டன் தொடங்​கு​கி​றது.​

​ ​ இரவு தங்​கப்​பல்​லக்​கில் உற்​ச​வர் திரு​வீதி உலா நடை​பெ​றும்.​ தின​மும் சுவாமி சிம்​மம்,​​ அனு​மந்த,​​ கருட,​​ ஷேஷ வாக​னங்​க​ளில் வீதி உலா வரு​வார்.​ ஆறா​வது நாள் ஆண்​டாள் சன்​னி​தி​யில் மாலை மாற்​றும் விழா நடை​பெ​றும்.​ மறு​நாள் உற்​ச​வ​ருக்கு மஞ்​சள் காப்பு அணி​விக்​கப்​ப​டும்.​ பிறகு தங்​கப்​பல்​லக்​கில் பவனி வரு​வார்.​

​ ​ ​ ​ வரும் 27-ம் தேதி,​​ வெண்​ணெய் தாழி கிருஷ்​ணன் அலங்​கா​ரத்​தில் காலை முதல் இரவு வரை அருள்​பா​லிப்​பார்.​ காலை 11 மணிக்கு முட்​டுத்​தள்​ளல்,​​ மறு​நாள் 28-ம் தேதி தெப்​பத்​தி​ரு​விழா நடை​பெ​ற​வுள்​ளது.​

​ பெரு​மாள் சீதேவி,​​ பூதே​வி​ய​ரு​டன் தங்​கப் பல்​லக்​கில் கோயில் குளக்​கரை மண்​ட​பத்​தில் எழுந்​த​ருள்​வார்.​ காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தெப்ப உற்​ச​வம் நடை​பெ​றும்.​

​ ​ மறு​நாள் தீர்த்​த​வா​ரியை முன்​னிட்டு சக்​க​ரத்​தாழ்​வா​ருக்கு அபி​ஷே​கம் நடக்​கும்.​ இரவு 9 மணிக்கு சுவாமி கோயில் ஆஸ்​தா​னம் சென்​ற​டை​வார்.

source ;Dinamani