Nagaratharonline.com
 
காரைக்குடியில் பெண்ணிடம் செயின் வழிப்பறி முயற்சி; வாலிபர் கைது  Dec 25, 14
 
காரைக்குடி நவரத்தின நகர் அருகே முத்துநகரை சேர்ந்தவர் செட்டியப்பன். இவரது மனைவி வள்ளி யம்மை,45. இவர் நேற்று காலை 9:30 மணிக்கு திலகர் நகர் நான்கு ரோட்டில் நடந்து சென்றார். இவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர், பெண்ணை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, நகையை கேட்டுள்ளார். வள்ளியம்மை சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை விரட்டி பிடித்து போலீ சாரிடம் ஒப்படைத்தனர். காரைக்குடி (குற்றப் பிரிவு) இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ், பெண்ணிடம் செயின் வழிப்பறி செய்ய முயன்ற விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வண்டாரியை சேர்ந்த செல்வம்,24, என்பவரை கைது செய்தார்.