Nagaratharonline.com
 
ஆ.தெக்கூர் கோயில் கலசத் திருட்டு: இருவர் கைது  Dec 25, 14
 
திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில், ஆ.தெக்கூர் தாமரைக்காட்டு அய்யனார் கோயில் கலசங்கள் சில மாதங்களுக்கு முன்பு திருடு போயின.நெற்குப்பை போலீசார் விசாரித்து வந்தனர். டிச.8ம் தேதியன்று சிங்கம்புணரியில் பெட்டகத் திருட்டில் சம்பந்தப்பட்ட இருவரை விசாரிக்கையில் கலசங்கள் திருடியது தெரிய வந்தது. அழகர்கோயில் சின்னத்தம்பி மகன் சின்னையா,25. மற்றும் கொட்டாம்பட்டி சின்னப்பையன் மகன் ஜெயராமன்,47 ஆகியோரை கைது செய்த போலீசார் நான்கு கலசங்களையும் மீட்டனர்.