Nagaratharonline.com
 
பலவான்குடியில் உள்ள ஊருணியை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் கிராமத்தினர் மனு  Dec 23, 14
 
பலவான்குடியில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஊருணியை சிலர் ஆக்கிரமித்துள்ளதை தடுத்து மீண்டும் ஊருணியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கிராமத்தினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சிவகங்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. கந்தசாமி தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: பலவான்குடி சிவன்கோயில் பின்புறமுள்ள கிழக்குப் பகுதியில் 1.5 ஏக்கரில் ஊருணியும், இதனை ஒட்டி 11 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளன.

சிலர் இதனை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். அதிகாரிகள் உதவியோடு நீர் நிலைகளை ஆக்கிரமித்து, விற்கும் முயற்சியில் இறங்குவதாகத் தெரிகிறது. எனவே இதனை மீட்டு நீர் நிலைகளை காப்பாற்றித் தரவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.