Nagaratharonline.com
 
NEWS REPORT: இன்னும் 10 நாள் தான் இருக்குது!பழைய நோட்டை மாத்திக்குங்க!  Dec 21, 14
 
இந்த ஆண்டு ஜன., 22ல், ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்தது. 2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்டு, பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூபாய் கரன்சி நோட்டுகள், 2015, ஜன 2 முதல் செல்லாததாகி விடும். எனவே, அதற்குள் தங்கள் வசம் உள்ள பணத்தை, வங்கிகளில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளுங்கள் என, உத்தரவிட்டது.

காலக்கெடு முடிவடைய, இன்னும் ஒன்பது நாட்கள் தான் உள்ளன.இதுவரை, 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 147 கோடி ரூபாய் மதிப்பிலான, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டு உள்ளன.

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் வெகுகுறைவாக இருப்பதால், அந்த நோட்டுகளை மாற்ற, ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.கடந்த 2005ம் ஆண்டுக்கு முன், ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட ரூபாய் நோட்டுகளில், ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்காது. 2005க்கு பின் வெளியான நோட்டுகளில் தான், எந்த ஆண்டில் அந்த நோட்டு தயாரிக்கப்பட்டது என்பது, தனியாக குறிக்கப்பட்டிருக்கும்.