Nagaratharonline.com
 
வா.மு.​ சேதுராமனுக்கு வரவேற்பு  Feb 17, 10
 
பொன்னமராவதி,பிப்.​ 16:​ ​ உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு குறித்து சென்னை முதல் குமரி வரை பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ள கவிஞர் வா.மு.​ சேதுராமனுக்கு மேலைச்சிவபுரியில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

​ ​ ​ ​ ​ ​ மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை சார்பில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு,​​ சபைத் தலைவர் ப.சா.​ சிங்காரம் தலைமை வகித்தார்.​ கல்லூரிக் குழுத் தலைவர் சி.​ நாகப்பன்,சபைச் செயலர் அ.​ சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ கல்லூரி முதல்வர் தா.​ மணி பாராட்டுரையாற்றினார்.​ கவிஞர் வா.மு.​ சேதுராமன் ஏற்புரையாற்றினார்.​ ​ சபை உறுப்பினர்கள் அ.​ சாமிநாதன்,​ பழ.​ சாமிநாதன்,பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் தெ.​ திருஞானமூர்த்தி,​ நூலகர் நா.​ முருகேசபாண்டியன்,​​ உடற்கல்வி இயக்குநர் ந.விஜயரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.​ ​ முன்னதாக பேராசிரியர் தி.​ பூங்குன்றன் வரவேற்றார்.​ நிறைவில்,​​ ​ பேராசிரியர் க.​ கனகராசு நன்றி கூறினார்