Nagaratharonline.com
 
கண்டனூரில் சீனிவாச பெருமாள் கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளித்தகடு திருட்டு  Dec 4, 14
 
கண்டனூரில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு கடந்த 30–ந்தேதி இரவு கோவில் அர்ச்சகர் சீனிவாசன், பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டினார்.

மறுநாள் அவர் பூஜை செய்தபோது சுவாமி வாகன அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே போய் பார்த்தபோது குதிரை வாகனத்தின் மேற்பகுதியில் இருந்த வெள்ளித்தகடுகள் சுரண்டப்பட்டு இருந்தன.

‘மர்ம’ ஆசாமிகள் உள்ளே புகுந்து 5 கிலோ எடை அளவு கொண்ட வெள்ளித்தகடுகளை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகும்.

இது குறித்து கோவில் உறுப்பினர் அண்ணாமலை, சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.