Nagaratharonline.com
 
குழம்பை பாலித்தீன் பையில்கொடுத்தால் ஓட்டல் உரிமம் ரத்து:கலெக்டர் எச்சரிக்கை  Dec 2, 14
 
திருப்புத்தூர் ஓட்டலில் குழம்பை பாலித்தீன் பையில் கொடுப்பதை ஆய்வில் கண்ட கலெக்டர் ராஜாராமன் எச்சரித்து தொடர்ந்தால் ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.திருப்புத்தூர் நகரில் கலெக்டர் ராஜாராமன் திடீர் ஆய்வு நடத்தினார். உரக்கடை, ஓட்டல்,பள்ளிக்கூடம், ரோடு, கிடங்கு என பலவற்றில் ஆய்வு நடத்தினார்.உரக்கடையில் போதுமான இருப்பு குறித்து விசாரித்தார். பின்னர் அருகிலிருந்த ஓட்டலில் ஆய்வு செய்த போது, குழம்பை பாலித்தீன் பையில்கொடுத்ததை கண்ட அவர் பாலித்தீன் பையை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தார்.