Nagaratharonline.com
 
கல்லல் : முடங்கிய கால்வாய் பணிகள் ரூ. 50 லட்சம் வீண்  Feb 14, 10
 
கல்லலில் 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, கழிவு நீர் கால்வாய் பணிகள் பாதியில் முடங்கியுள்ளன. கல்லல் பஸ் ஸ்டாண்ட்- சின்ன ஊரணி ரோட்டில், 50 லட்ச ரூபாயில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. ஆனால்,பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாசல், வெளியேறும் பகுதியில், கால்வாய் பாலம் கட்டப்படவில்லை. இதற்காக சிமென்ட் குழாய்கள், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் போடப் பட்டன. பல மாதங்களாக இக்குழாய்களை பதிக்காமல், காட்சி பொருளாக வைத்துள்ளனர். கால்வாய் அமைத்து, ஒரு ஆண்டுக்கு மேலாகியும் செயல்பாடின்றி உள்ளது.குடிநீர் குழாய் சேதம்:இப்பகுதியில் சேரும் குப்பைகளை, கால்வாய்க் குள் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் பணியின் போது, சேதம் அடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கவில்லை. இதனால் அக்ரஹாரம், அரசு மகளிர் பள்ளி பகுதிகளில் வசிப்போருக்கு குடிநீர் கிடைக்காமல், அவதி அடைகின்றனர்.கல்லல் ஊராட்சி தலைவர் வைரமுத்து கூறுகையில், ""சேதம் அடைந்த குழாய்களை, ஊராட்சி மூலம் சீர்படுத்தி வருகிறோம்,'' என்றார்.


source : Dinamalar