Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் கூடுதல் நேரம் நடைதிறப்பு  Nov 20, 14
 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விரத காலத்தை முன்னிட்டு கூடுதல் நேரம் நடை திறக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை பிறந்தவுடன், சபரிமலை செல்லும் பக்தர்கள் கற்பக விநாயகர் தரிசனத்திற்கு பிள்ளையார்பட்டி வந்து செல்கின்றனர். இதனால் இக்கோயில் நடை பிற்பகலில் கூடுதல் நேரம் திறக்கப்படுகிறது.வழக்கமாக காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும்,மாலை 4 மணி முதல் இரவு 8. 30 மணி வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும். பகல் 1.00- மாலை 4.00 மணி வரை நடை பூட்டப்பட்டிருக்கும். தற்போது வரும் விரத பக்தர்களின் வசதி கருதி, கோயில் நிர்வாகம் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பகலில் நடை பூட்டப்படாமல் கூடுதல் நேரம் திறந்து வைத்துள்ளனர்.