Nagaratharonline.com
 
நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம்  Nov 18, 14
 
நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்ப காலத்தில் சிக்கலாக உள்ள பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். காரைக்குடி அரசு மகப்பேறு மருத்துவர் செல்வி, முகமது அசரில்பா ஆகியோர் மருத்துவக் குழுவினருடன் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார்.

50 கர்ப்பிணிகள் கலந்து கொண்ட இம்முகாமில் 31 பேர் கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. உடனடியாக இவர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கும் பரிந்துரைக்கப்பட்டனர்.