Nagaratharonline.com
 
சென்னையில், புதிதாக ஆவின் பால் அட்டை பெற டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்  Nov 17, 14
 
சென்னையில், ஜனவரி முதல், 13 ஆயிரம் லிட்டர் வரை கேட்டு, ஆவின் அட்டைக்கு, பொதுமக்கள் பதிந்து வைத்துள்ளனர். அவர்களின், முகவரியில் நேரடி ஆய்வு செய்து, புதிதாக அட்டைகள் வழங்கப்படும். ஆய்வுப்பணிகள், இந்த வாரத்தில் துவங்கும். புதிதாக கார்டு பெற, டிச., 1ம் தேதி முதல், 16 ஆவின் மண்டல அலுவலகங்களிலும், நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்தோருக்கு அட்டை தந்தபின், புதிதாக விண்ணப்பிப்போருக்கு, ஆய்வு செய்து அட்டைகள் தரப்படும்.இவ்வாறு ஆவின் அதிகாரி ஒருவர் கூறினார்.