Nagaratharonline.com
 
திருப்பத்தூரில் மகா சிவராத்திரி விழா  Feb 13, 10
 
திருப்பத்தூர்,பிப்.13: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் சிவகாமசுந்தரி திருத்தளிநாதர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.

முதல்கால பூஜையில் இரவு 8.30 மணிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், ஆகிய அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4.30 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெற்றன. ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக இரவு 10.30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்றது.

ஆதிதிருத்தளிநாதர் கோயில், புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திலும், சிவராத்திரி விழா நடைபெற்றன.

Source:Dinamani