Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி  Oct 23, 14
 
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளியில் திருமுறை மன்றம் சார்பில் தேவாரம், திருவாசகம், மற்றும் திருமுறை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

போட்டியினை பள்ளித் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தொடக்கி வைத்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் பல மாணவிகள் தேவாரம், திருவாசகம், மற்றும் திருமுறைகள் ஒப்புவித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை, இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அப்போலோ திட்ட மேம்பாடு மற்றும் சமூக நல மருத்துவர் ஏ.மீனாட்சி பாராட்டி, திருமுறை மன்றம் சார்பில் வழங்கபட்ட பரிசினையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.