Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், நவராத்திரி விழா  Oct 4, 14
 
நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இங்கு, புரட்டாசி திருவிழா செப்.,26 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி சிறப்பு வாகனங்களில் எழுந்தருளினார். செப்.,29 அன்று கருட வாகனத்திலும், அக்.,1ல் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. இன்று காலை 10 மணிக்கு, தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.