Nagaratharonline.com
 
காரைக்குடி போஸ்டாபீசில் பாஸ்போர்ட் ஆன் லைன் சேவை  Sep 18, 14
 
காரைக்குடி,தேவகோட்டை தலைமை போஸ்டாபீஸ்களில்,பாஸ்போர்ட் ஆன் லைன் சேவை, வரும் 22ம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது.
ரூ.10 கட்டணமாக செலுத்தி,விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, "ஏ.ஆர்.என்' எனப்படும் ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும். அதன்பிறகு எஸ்.பி.ஐ.,படிவம் ஒன்று வழங்கப்படும். அதை ஸ்டேட் வங்கியில், பாஸ்போர்ட்டுக்கு உரிய பணம் என்று செலுத்தி, அதன் தகவலை போஸ்ட் ஆபிசில் ஏற்கனவே ரூ.100 செலுத்திய ரசீதுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் போஸ்டாபீசில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய தேதியின், ஒரு நகல் விண்ணப்பதாரருருக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தலைமை அஞ்சலக அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். இதனால் பாஸ்போர்ட் ஏஜன்ட்களுக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியது இருக்காது, ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும், என காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தெரிவித்தார்.