Nagaratharonline.com
 
பொன்னமராவதி :போலியோ சொட்டு மருந்து முகாம்  Feb 7, 10
 
பொன்னமராவதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. பொன்னமராவதி பஸ் ஸ்டாண்டில் புதுகை மருத்துவ உதவி இயக்குநர் உமா முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர். சதாசிவம் தலைமையில் 26 மையங்களில் ஆயிரத்து 300 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.பொன்-புதுப்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், செயலாளர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் செயலாளர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் வேல்முருகன், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.*காரையூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 27 மையங்களில் ஆயிரத்து 200 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.*மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றிய சேர்மன் ராஜூ போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.*வேகுப்பட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பொன்.ராமையா போலியோ சொட்டு மருந்து கொடுத்து தொடங்கி வைத்தார். டாக்டர்.சரவணன் தலைமையில் 23 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.*கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 22 மையங்களில் டாக்டர்.பிரேமா தலைமையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


source : Dinamalar