Nagaratharonline.com
 
காரைக்குடி கழனிவாசல் அரசு மருத்துவமனையில், எலக்ட்ரானிக் திரையில் குழந்தை பிறந்த விபரம்  Sep 14, 14
 
காரைக்குடி கழனிவாசல் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 5-க்கும் மேற்பட்ட, குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த தகவலை அனைவரும் பார்க்கும் வகையில், "டிஜிட்டல் எலக்ட்ரானிக் ஸ்குரோலிங் போர்டு' அமைக்கப்பட்டுள்ளது. இதில், அன்றைய தினம் பிறந்த குழந்தைகள் எந்த தம்பதியினருக்கு பிறந்துள்ளது, என்ன குழந்தை, பிரசவ வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், குழந்தைகள் வார்டில் பணிபுரியும் டாக்டர்கள் ஆகியோரின் பெயர்களும் வருகின்றன. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமே, இந்த வசதி ஓரளவு செயல்பாட்டில் உள்ளது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, இம்மருத்துவமனை விரைவில், தலைமை மருத்துவமனையாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி, பிரசவவார்டின் வெளிப்புறம், நுழைவு வாயில், முதலமைச்சரின் உயிர்காக்கும் பிரிவு நுழைவு வாயில், வார்டின் மெயின் பகுதி ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது.