Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் கண் தானத்தை வலியுறுத்தி பேரணி  Aug 20, 14
 
பொன்னமராவதியில் கண் தானத்தை வலியுறுத்தி பார்வைக்கோர் பயணம் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி புதுவளவு,புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்து நிலையம் வழியாக வந்து சோழீஸ்வரர் கோயில் திடலில் நிறைவுற்றது.

இதில் பங்கேற்ற மாணவர்கள் கண் தானத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.