Nagaratharonline.com
 
சூரக்குடிகோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா  Feb 3, 10
 
சிவகங்கை மாவட்டம்,​​ காரைக்குடி அருகே சூரக்குடி நகரச் சிவன் ​ கோயிலில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது.

​ ​ ​ ​ விழாவில்,​​ கவிஞர் அரு.​ சோமசுந்தரம் தலைமை வகித்துப் பேசினார்.​ கவிஞர் ஆண்டியப்பன் வரவேற்றுப் பேசினார்.​ காரைக்குடி சிங்காரம் செட்டியார்,​​ கோயில் ​ அறங்காவலர் முத்துப்பழனியப்பச் செட்டியார்,​​ செந்தூரான் கல்வி நிறுவன நிறுவனர் வைரவன்,​​ என்.பி.​ ராமசாமி,​​ அழகப்பா பல்கலைக்கழகத் தேர்வாணையர் வி.​ மாணிக்கவாசகம்,​​ வள்ளிக்கண்ணு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.​ ​

​ ​ ​ ​ நிகழ்ச்சியில்,​​ பள்ளி மாணவ,​​ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக,​​ கயிலைமணி நீலா இறைவணக்கம் பாடினார்.​ முடிவில்,​​ பழனியப்பன் நன்றி கூறினார்.

source : Dinamani