Nagaratharonline.com
 
சிறுவாபுரியில் வள்ளி மணவாள முருகப் பெருமான் திருக்கல்யாணம்  Aug 12, 14
 
 
சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஆலயத்தில் வள்ளி மணவாள முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர், ஆதி மூலவர், அண்ணாமலையார், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு வள்ளி முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து வள்ளி மணவாள முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றபோது கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தம்பதி சமேதராய் அருள்பாலித்தார்.

தொடர்ந்து சுவாமி புறப்பாடு நிகழ்வும், திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. மேலும் திருக்கயிலாய இசை இசைக்கப்பட்டதோடு, தேச மங்கையர்கரசியின் ஆன்மிகச் சொற்பொழிவும் நடத்தப்பட்டது.