Nagaratharonline.com
 
பொன்னமராவதி பகுதியில் கனமழை  Aug 8, 14
 
பொன்னமராவதி சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.

கோடைகாலம் முடிந்த பின்னரும் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய மழை விட்டு விட்டு மாலை வரை பெய்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தோடியது. இந்த மழை கடலை பயிரிட உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.