Nagaratharonline.com
 
SMS மூலம் மின் கட்டணம்: மின்வாரியம் அறிவிப்பு  Aug 5, 14
 
திருப்பத்தூர் கோட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர், ஆ.தெக்கூர், நெற்குப்பை, கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூர், சிங்கம்புணரி, எஸ்.வி. மங்கலம், காளாப்பூர், பிரான்மலை,செவ்வூர், கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மின் நுகர்வோருக்கு மாத மின் கட்டண விவரங்கள் கை பேசியில் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது.

அவற்றில் சில மின் நுகர்வோர் தங்கள் எண்களை தவறாக பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மின் நுகர்வோர் அந்தந்த பிரிவு அலுவலகத்தில் உள்ள கைபேசி எண் பதிவேட்டில் மின் இணைப்பு எண், மின் பகிர்மானம், மற்றும் தங்களுடைய தொலைபேசி எண் ஆகியவற்றை சரியான முறையில் பதிவு செய்து பயன் பெறுமாறு செயற்பொறியாளர் முருகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.