Nagaratharonline.com
 
காரை கண்மாய்க்குள் தள்ளிய கள்வர்கள்  Aug 1, 14
 
காரைக்குடி காளவாய்பொட்டலை சேர்ந்தவர் சிவக்குமார்,32. இவர் "செட்டிநாடு டிராவல்ஸ்' நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கார்களை,டி.டி.நகர் கீழத்தெரு பகுதியில் வாகன காப்பகத்தில் நிறுத்தி, சாவியை காப்பகத்தில் வைத்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவில் வாகன காப்பகத்தில், நுழைந்த மர்ம ஆசாமிகள் காரை எடுத்துள்ளனர். பின்புறம் வந்தபோது, அருகில் உள்ள புளியமரத்தில் மோதி காரின் பம்பர் உடைந்துள்ளது. தொடர்ந்து காரை ஓட்டி சென்றவர்கள், முத்துப்பட்டணம் முத்தூரணியில், உருட்டி விட்டுள்ளனர். நேற்று காலை, ஊரணிக்குள் கார் மூழ்கி கிடப்பதை பார்த்த, அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் காரை மீட்டு விசாரித்து வருகின்றனர்.போலீஸ் தரப்பில் கூறும்போது: திருடும் நோக்கத்தில் காரை எடுத்தவர்கள், ஓட்ட தெரியாததால், ஊரணிக்குள் இறக்கினார்களா? அல்லது போதையில் காரை ஊரணிக்குள் உருட்டி விட்டார்களா? தொழில் போட்டியா? என்பது தெரியவில்லை, விசாரித்து வருகிறோம், என்றனர்.