Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் ஆடி மகா உற்சவ விழா  Jul 23, 14
 
வைரவன்பட்டி வடிவுடையம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோயிலில் ஆடி மகா உற்சவ திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாட்டுக் கோட்டை நகரத்தாரின் 9 திருக்கோயில்களில் ஒன்றாகிய வடிவுடையம்மாள் சமேத வளரொளிநாதர் வைரவசாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆடி மகா உற்சவம் தொடங்கியது. முதல்நாள் விழாவாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து வாஸ்து சாந்தி, மிருத்நங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷனாபந்தனம், காப்புக்கட்டுதல், முதலிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு சாமி சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

பின்னர் திசை மாறிய தெய்வங்களும், திசை மாற்றிய தெய்வங்களும் என்ற தலைப்பில் கவிஞர் சிவல்புரிசிங்காரம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து ஆக.1 ஆம் தேதி வரை உற்சவம் நடைபெற உள்ளது. இதில் 30ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.