Nagaratharonline.com
 
காரைக்குடி அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்: போலீசில் தந்தை புகார்  Feb 1, 10
 
காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் கிராமத்தை
சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அருண்குமார். (வயது 13). இவன் கோட்டையூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற அருண்குமார் இதுவரை வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சி அடைந்த தியாக ராஜன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவன் அருண்குமார் எங்கு சென்றான்? என்ன ஆனான்? கடத்தப்பட்டானா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


source : Maalai malar