Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் பேரூராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு  Jul 3, 14
 
பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அறிவிப்பு வெளியான ஜூலை 2-ம் தேதியிலிருந்து 7 நாட்களுக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் பேரூராட்சியின் கடை ஏலதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தவிர ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை உடன் அகற்றி கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பேரூராட்சியின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குரிய முழுச் செலவுத்தொகையையும் தங்களிடமிருந்து வசூலிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து பொன்னமராவதி நகர் முழுவதும் ஆட்டோ மூலம் அறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.