Nagaratharonline.com
 
கொத்தமங்கலத்தில் ஆச்சியை கட்டிபோட்டு கழுத்தறுப்பு  Jul 1, 14
 
கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் உண்ணாமலை ஆச்சி,86. இவர், அவரது மகள் வள்ளிக்கண்ணு,64, கொத்தமங்கலத்தில் வீட்டில் வசித்து வருகின்றனர். வள்ளிக்கண்ணுவுக்கு திருமணம் ஆகவில்லை.

நேற்று வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து, இருவரையும் கட்டி போட்டு, பீரோ சாவியை பறித்து, வீட்டில் கொள்ளயடிக்க முயன்றுள்ளனர். கத்தியால் வள்ளிக்கண்ணுவின் கழுத்தை அறுத்து விட்டு, உண்ணாமலை ஆச்சியை தள்ளி விட்டு தப்பினர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, உண்ணாமலை ஆச்சி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவர்கள் இருவரையும், காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருடும் நோக்கத்துக்காக வந்தவர்களிடம் சாவியை வழங்கிய பிறகும், வள்ளிக்கண்ணுவை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.

கொலை செய்யும் முயற்சியோடு நடந்ததா? திருடியபோது தடுத்ததால் நடந்ததா, என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கழுத்தில் அறுபட்டதால் வள்ளிக்கண்ணுவால் பேச முடியவில்லை. உண்ணாமலை ஆச்சிக்கும் வயதாகி விட்டதால், அவரது பேச்சும் யாருக்கும் புரியவில்லை. வள்ளிக்கண்ணு குணமானால் மட்டுமே உண்மை நிலை தெரிய வரும், என போலீசார் தெரிவிக்கின்றனர்.