Nagaratharonline.com
 
காரைக்குடியை கலக்கிய பிரபல கொள்ளையன் பிடிபட்டான்  Feb 1, 10
 
காரைக்குடி புதுசந்தை பேட்டையை சேர்ந்தவர் முத்துபழனியப்ப செட்டியார். இவர் வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று இவரது வீடு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் முத்து பழனியப்ப செட்டியாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊருக்கு விரைந்தார். அப்போது வீட்டில் இருந்த 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இது குறித்து காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

நேற்று இரவு ரோந்து சென்றபோது வாலிபர் ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சையை சேர்ந்த ரவி என்றும், பிரபல கொள்ளையன் என்றும் தெரிய வந்தது. அவனிடம் இருந்த 19 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவன் கொடுத்த தகவலின் கூட்டாளி ஏழுமலை என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


source : Maalai malar