Nagaratharonline.com
 
சொக்கலிங்கம்புதூர் : வீட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை  Jun 24, 14
 
சொக்கலிங்கம் புதூரை சேர்ந்தவர் நெல்லையப்பன்,50.இவர் சென்னை வளசரவாக்கத்தில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். சொக்கலிங்கம்புதூர் கு.பெ.அ.தெருவில்,இவருக்கு சொந்தமான வீடு உள்ளது.விசேஷங்களின் போது,குடும்பத்துடன் இங்கு தங்கி செல்வது வழக்கம் .

கடந்த 40 நாட்களுக்கு முன்பு,வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது வீட்டை உடைத்து, மர்ம நபர்கள்,மூன்று பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.காலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு,அருகில் உள்ளவர்கள் செட்டிநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லையப்பன் புகாரின் பேரில்,செட்டிநாடு சிறப்பு எஸ்.ஐ., ருத்ராபதி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.