Nagaratharonline.com
 
கல்லூரி மாணவர்களுக்கான தொழில்முனைவுப் பயிற்சி  Feb 1, 10
 
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான தொழில்முனைவுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

​ ​ ​ ​ கல்லூரி நிர்வாகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு,​​ கல்லூரியின் பொறுப்பு முதல்வர் க.​ அரங்கநாதன் தலைமை வகித்தார்.​ பேராசிரியர் தி.​ பூங்குன்றன் முன்னிலை வகித்தார்.

​ ​ ​ ​ தமிழக உணவக உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் சண்முக.​ பழனியப்பன்,​​ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொன்னமராவதி கிளை முதுநிலை மேலாளர் முப.​ வள்ளியப்பன்,​​ புதுக்கோட்டை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய முதன்மை ஆலோசகர் ச.​ பிரிதிவிராஜ்,புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.​ சேவியர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.​ சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா.​ சிங்காரம் சிறப்புரையாற்றினார்.​ பயிற்சியில் பங்கேற்ற மாணவ,மாணவியர் 100 பேருக்கும் அவர் சான்றிதழ்களை வழங்கினார்.​ மாலை நேரக் கல்லூரிச் செயலர் அ.​ சுவாமிநாதன் வாழ்த்திப் பேசினார்.

​ ​ ​ ​ ​ முன்னதாக,​​ பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நா.​ விஜயரகுநாதன் வரவேற்றார்.​ நிறைவில்,​​ பயிற்சி துணை ஒருங்கிணைப்பாளர் எம்.​ காசிவைரவன் நன்றி கூறினார்.


source : Dinamani